ஹாங்காங் : ஆர்ப்பாட்டம் தொடங்கி 6 மாதங்கள் ஆகிவிட்டதைக் குறிக்கும் பேரணி
ஹாங்காங்கில் இன்று பெரிய அளவிலான பேரணி நடத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இன்று பெரிய அளவிலான பேரணி நடத்தப்பட்டுள்ளது.
ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி 6 மாதங்கள் ஆகிவிட்டதைக் குறிக்கும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.
பல ஆயிரம் பேர் சாலைகளில் திரண்டனர்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் பேரணிகளில், இன்றைய பேரணியிலேயே ஆக அதிகமானோர் கலந்துகொண்டதாக நம்பப்படுகிறது.
ஹாங்காங்கின் கடைத்தொகுதிகள் அதிகம் உள்ள பரபரப்பான காஸ்வே பே (Causeway Bay) பகுதியில் பேரணி தொடங்கியது.
நிதி வட்டாரத்தின் மையப் பகுதியான செய்ட்டர் சாலைக்கும் பேரணியில் ஈடுபட்டவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.