ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களைக் கையாள தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள்
ஹாங்காங்கில் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் புதிய வழியில் இறங்கியுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஹாங்காங்கில் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் புதிய வழியில் இறங்கியுள்ளனர். காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கையாள தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களைக் களமிறக்கியுள்ளனர்.
கண்ணீர்ப் புகையையும் ரப்பர் தோட்டாக்களையும் கொண்டு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்கியதால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போராட்டங்களின்போது அவற்றைக் கொண்டு பொதுமக்கள்மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படும்.