ஹாங்காங்கில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்து 5,000 பேர் பாதுகாப்புப் பணியில்
ஹாங்காங்கில் (Hong Kong) இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், காவல் துறையைச் சேர்ந்த 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹாங்காங்கில் (Hong Kong) இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், காவல் துறையைச் சேர்ந்த 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய சட்ட மசோதா குறித்து இன்னும் சற்று நேரத்தில், ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர்.
சட்டமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 2,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
பன்னாட்டு நிறுவனங்கள் பலவும், தங்களது ஊழியர்கள் இன்று நீக்குப்போக்கான வேலை நேரத்தைக் கடைப்பிடிக்க இணங்கியுள்ளன.