ஹாங்காங் விமான நிலையச் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் இன்று காலை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன.
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் இன்று காலை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன.
நேற்று (ஆகஸ்ட் 12) பிற்பகல் சுமார் 5,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
அமைதியான ஆர்பாட்டத்தில் கலந்துகொணவர்கள் மாலையில் ஒன்றொன்றாகத் திரும்ப தொடங்கினர். தற்போது ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்கள் எஞ்சியுள்ள வண்ணத்தில் விமானச் சேவைகள் தொடங்கியுள்ளன
இருப்பினும் நகர் பகுதிகளில் இன்று பின்நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் உறுதிகூறியுள்ளனர்.
ஹாங்காங்கில் நிலவும் அமைதியின்மை பயங்கரவாதத்திற்கான அறிகுறிகள் என்று சீனா எச்சரிக்கை விடுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருட்படுத்துவதாக இல்லை. 10வது வாரமாக ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன.