ஹாங்காங் : வரும் நாள்களில் மேலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டம்
ஹாங்காங்கில் வரும் நாள்களில் மேலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஹாங்காங்கில் வரும் நாள்களில் மேலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
நேற்று பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஹாங்காங் மக்கள் அமைதியான முறையில் பேரணிகளை நடத்தினர்.
நேற்று சுமார் 1.7 மில்லியன் பேர் பேரணியில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
சர்ச்சைக்குரிய மசோதாவைப் புறக்கணிக்க ஹாங்காங்கில் தொடர்ந்து 11ஆவது வார இறுதியாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.
கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறின.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இதுவரை 700க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.