நூற்றுக்கணக்கானோர் புதிய கொரோனா (Corona) கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்
சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா கிருமியால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா கிருமியால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 41 பேர் புதிய கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையின்மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் சுமார் 1,700 பேர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். கிருமி இருவரின் உயிரைப் பறித்துள்ளது.
வூஹான் நகரில் அந்தக் கிருமி முதலில் பரவியது. கிருமி பரவி வருவதைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலையங்களில் வூஹான் நகரிலிருந்து வரும் பயணிகள் சோதிக்கப்படுகின்றனர். அதே போல அமெரிக்காவின் மூன்று முக்கிய விமான நிலையங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.