லண்டனின் ஹைட் பூங்காவில் மாண்டு கிடந்த மலேசிய மாணவர்
லண்டனின் ஹைட் பூங்காவின் ஏரியில் 23 வயது மலேசியா மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
லண்டனின் ஹைட் பூங்காவின் ஏரியில் 23 வயது மலேசியா மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2 மணி அளவில் அவர் சடலம் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது.
Imperial College பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு வேதியியல் மாணவர் முகமது ஹஃபிஸ்.
சம்பவ இடத்தில் ஆடவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. Malay Mail நாளிதழ் ஆசிரியரின் மகன் அவர். அவரின் குடும்பத்தார் நாளை (27 மார்ச்) லண்டன் சென்றடைவர்.
2015இலிருந்து லண்டனில் பயின்றுவந்தார் ஹஃபிஸ்.
மாணவரின் மரணத்திற்கான காரணத்தைக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.