கிருமித்தொற்றை எதிர்கொள்ள மியன்மாருக்கு 356 மில்லியன் டாலர் அவசரகால நிதியுதவி
அனைத்துலகப் பணநிதியம், மியன்மாருக்கு 356 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை, அவசரகால நிதியுதவியாய் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அனைத்துலகப் பணநிதியம், மியன்மாருக்கு 356 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை, அவசரகால நிதியுதவியாய் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அது, மியன்மார் அரசாங்கத்தின் சுகாதாரச் செலவுகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போதைய சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டோருக்கு ரொக்கமாக உதவி செய்யவும் அது வகை செய்யும்.
COVID -19 நோய்த்தொற்றால் மியன்மாரின் பொருளியல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.