கொழும்பு விமான நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது - இலங்கைக் காவல்துறை
கொழும்பு விமான நிலையம் அருகே சுயமாகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
கொழும்பு விமான நிலையம் அருகே சுயமாகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை இலங்கையின் ஆகாயப்படையினர் வெற்றிகரமாகச் செயலிழக்க செய்துள்ளனர்.
கொழும்பு விமான நிலையத்தின் முக்கிய முனையத்திற்கு இட்டுச் செல்லும் சாலையில் அந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பலந்த பாதுகாப்புடன் விமான நிலையம் செயல்படுகிறது.
செயலிழக்கப்பட்ட வெடிகுண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
இலங்கைக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இதுவரை குறைந்தது 290 பேர் மாண்டதாகவும் சுமார் 500 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. சம்பவங்களின் தொடர்பில் விசாரணை நடைபெற்றுவருகிறது.