ஹாங்காங்: கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன
ஹாங்காங்கில் கிருமிப் பரவல் அதிகரிப்பதையொட்டி, சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளை அதிகாரிகள் மேலும் கடுமையாக்கியுள்ளனர்.
ஹாங்காங்கில் கிருமிப் பரவல் அதிகரிப்பதையொட்டி, சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளை அதிகாரிகள் மேலும் கடுமையாக்கியுள்ளனர்.
புதிய விதிமுறைகள் இன்று நள்ளிரவிலிருந்து நடப்புக்கு வரும்.
அதன் கீழ், மதுபானக் கூடங்கள், மது இசைக்கூடங்கள், இரவுவிடுதிகள் போன்றவற்றில் நேரடியாக நிகழ்ச்சிகளைப் படைக்க அனுமதி இல்லை.
வழக்கமாக சமூக ஒன்றுகூடல்களுக்குப் பயன்படுத்தப்படும் வசதிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாலாம் கட்டக் கிருமிப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும்வேளையில், உடனடி நடவடிக்கை அவசியம் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.