காஷ்மீர் விவகாரத்தில் அனைத்துலகத் தலையீட்டைக் குறைகூறும் இந்தியா
காஷ்மீர் விவகாரத்தில் அனைத்துலகத் தலையீட்டை இந்தியா கடுமையாகக் குறைகூறியிருக்கிறது.
காஷ்மீர் விவகாரத்தில் அனைத்துலகத் தலையீட்டை இந்தியா கடுமையாகக் குறைகூறியிருக்கிறது.
காஷ்மீர் விவகாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று, அனைத்துலக நாடுகள் தங்களுக்குக் கற்றுத் தர வேண்டாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான இந்தியத் தூதர் செய்யது அக்பருதீன் கூறினார்.
பில்லியன் கணக்கான மக்களைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றார் அவர்.
மக்களின் சிரமங்களை நீக்க இந்திய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகத் தெரிவித்த திரு. அக்பர், அதற்கு உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.