இந்தியா: கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 9 மில்லியனைத் தாண்டியது
இந்தியாவில் கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 9 மில்லியனைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 9 மில்லியனைத் தாண்டியுள்ளது.
கடந்த சுமார் 24 மணி நேரத்தில் புதிதாக 45,800க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.
செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு கிருமித்தொற்றுச் சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை குறைந்துள்ளது.
இருப்பினும், மீண்டும் கிருமிப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாதம் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் விதிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்கவில்லை என்பதை அவர்கள் சுட்டினர்.