இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய இமாலய எல்லைப் பகுதி குறித்து இன்று மீண்டும் பேச்சு
இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய இமாலய எல்லைப் பகுதி குறித்து இன்று மீண்டும் பேச்சு
இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய இமாலய எல்லைப் பகுதி குறித்து இன்று மீண்டும் பேச்சு நடத்தவிருக்கின்றன.
லடாக் வட்டாரத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் பதற்றத்தைத் தணிக்க இருதரப்பின் உயர் ராணுவ அதிகாரிகளும் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவத் துருப்புகளை முன்பிருந்த இடத்திற்கு மீண்டும் மாற்றிவிடுவது அவற்றுள் ஒன்று.
அண்மையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த படையினருக்கு இடையே பதற்றம் ஏற்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து இருதரப்பும் எல்லைப் பகுதியில் தங்கள் துருப்பினரை அதிகரித்து, போர் ஆயுதங்களையும் குவித்து வருகின்றன.
இந்தியாவும் சீனாவும் அமைதியான கலந்துரையாடல் மூலம் வேறுபாடுகளைத் தீர்த்து, சச்சரவுகளைத் தவிர்க்க ஒப்புக் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.