இந்தியா: நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 மில்லியனைக் கடந்தது
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 மில்லியனைக் கடந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 மில்லியனைக் கடந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அங்கு புதிதாக 82,000க்கும் அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
கடந்த 24 மணி நேரத்தில் 1,039 மரணங்கள் பதிவாகின. கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை சுமார் 95,500.
அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா தான் கிருமித்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 7 மில்லியனைக் கடந்தது.
உலக அளவில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் மடிந்தனர்.