இந்தியா: முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 67,000 பேருக்குக் கிருமித்தொற்று
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அங்கு புதிதாக சுமார் 67,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அங்கு புதிதாக சுமார் 67,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 942 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
கடந்த இரண்டு நாள்களாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்றுக் குறைந்திருந்தது.
இந்தியாவில் மொத்தம் சுமார் 2.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாண்டோர் எண்ணிக்கை 47,000-ஐத் தாண்டியுள்ளது.
தொடர்ந்து 15 நாள்களாகத் , தினசரி 50,000க்கும் மேற்பட்டவர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.