புதுடில்லியில் வீடு வீடாகச் சென்று கிருமிப்பரவல் தொடர்பில் தகவல் சேகரிக்கும் பணி
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கிருமிப்பரவல் தொடர்பில் தகவல் சேகரித்து வருகின்றனர்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கிருமிப்பரவல் தொடர்பில் தகவல் சேகரித்து வருகின்றனர்.
புதுடில்லி, இந்தியாவில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய முடக்கம் அகற்றப்பட்டதும், சுகாதாரத்துறை அதிகாரிகளின் கணிப்பைத் தாண்டி அங்குக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின்றன.
மருத்துவமனைகளில், கிருமித்தொற்றுச் சோதனைக்குக் காத்திருப்போர் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்தியாவில் 500,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15,600க்கும் அதிகமானோர் மாண்டனர்.