இந்தியாவில் கிருமித்தொற்று உறுதியாவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வருகிறது
இந்தியாவில் புதிதாக 88,600 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக 88,600 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தினசரி கிருமித்தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை சென்ற வாரம் சராசரியாகச் சுமார் 7,000 குறைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஒப்புநோக்க, அன்றாடம் குணமடைந்து வசிப்பிடம் திரும்புவோர் எண்ணிக்கை அதைவிட அதிகம்.
நேற்று 1,124 பேர் மாண்டதாக இந்தியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களையும் சேர்த்து மொத்தம் சுமார் 94,500 பேர் மாண்டுவிட்டனர்.
5.9 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதியானது.
அவர்களில் 82 விழுக்காட்டினர் குணமடைந்ததாக Johns Hopkins பல்கலைக் கழகத் தகவல்கள் கூறுகின்றன.