COVID-19: இந்தியாவில் குறைந்துகொண்டே வரும் அன்றாட பாதிப்பு
இந்தியாவில் மேலும் சுமார் 86,500 பேரிடம் கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேலும் சுமார் 86,500 பேரிடம் கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில், ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை அது.
இந்தியாவில் நோய்த்தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 29 மில்லியனை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
நேற்று 2,100 பேர் நோய்க்குப் பலியாயினர்.
அங்கு மொத்தம், 351,000 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
இந்நிலையில், மக்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தைத் துரிதப்படுத்தவிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்றார் அவர்.