இந்தியாவில் உயிர்வாயு விநியோகத் தடையால் COVID-19 நோயாளிகள் 22 பேர் மரணம்
இந்தியாவில் சுவாசக் கருவிகளுக்குத் தேவையான உயிர்வாயுவின் விநியோகத்தில் தடை ஏற்பட்டதால் இருபத்து இரண்டு COVID-19 நோயாளிகள் மாண்டனர்.
இந்தியாவில் சுவாசக் கருவிகளுக்குத் தேவையான உயிர்வாயுவின் விநியோகத்தில் தடை ஏற்பட்டதால் இருபத்து இரண்டு COVID-19 நோயாளிகள் மாண்டனர்.
மகாராஷ்டிராவின் நாஷிக் பகுதியிலுள்ள Dr Zakir Hussain மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்தப்பட்ட உயிர்வாயு டேங்க்கரில் (Tanker) அரை மணிநேரத்திற்குக் கசிவு ஏற்பட்டது.
அதனால் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த 60க்கும் மேற்பட்ட COVID-19 நோயாளிகளின் சுவாசக் கருவிகளுக்குச் சென்றுகொண்டிருந்த உயிர்வாயு தடைப்பட்டது.
அரை மணிநேரத்திற்குப் பின், உயிர்வாயு மீண்டும் அளிக்கப்பட்டது. கசிவு ஏற்பட்ட டேங்க்கரிலிருந்தே மறுபடியும் உயிர்வாயு பயன்படுத்தப்பட்டது
- Reuters