COVID-19: இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளான நோயாளிகளின் பதிவேட்டை உருவாக்கத் திட்டம்
COVID-19: இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளான நோயாளிகளின்
இந்தியா, கிருமித்தொற்று நோயாளிகளின் தகவல்களைக் கொண்ட, தேசிய அளவிலான பதிவேட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்திய சுதாதார அமைச்சுடனும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடனும் இணைந்து, இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் அதனை உருவாக்கும்.
தேசிய அளவில், கிருமித்தொற்றுக்கான சிகிச்சை முறையை மேம்படுத்த அது வகைசெய்யும் என்று கருதப்படுகிறது.
புதிய சிகிச்சை முறைகளை மனிதர்களிடம் சோதிக்கவும் அது உதவும்.
புதிய கட்டமைப்பை உருவாக்க சுமார் 15 மருத்துவ நிலையங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவமனைகளும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.