Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உலகில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒரே நாளில் ஆக அதிகமான கிருமித்தொற்று மரணங்கள்

உலகில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,148 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
உலகில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒரே நாளில் ஆக அதிகமான கிருமித்தொற்று மரணங்கள்

(படம்: Reuters/Amit Dave)

உலகில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,148 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

பீஹார் (Bihar) மாநிலத்தின் சுகாதாரத்துறை, நோய்த்தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கையை மறுஆய்வு செய்த பின்னர், சுமார் 5,400ஆக இருந்த மரண எண்ணிக்கை, கிட்டத்தட்ட 9,400க்கும் அதிகமாக உயர்ந்தது.

மறுஆய்வில், வீட்டிலும் தனியார் மருத்துவமனைகளிலும் கிருமித்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டது.

முன்னதாக, பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்காவில் ஒரே நாளில் 5,444 COVID-19 மரணங்கள் பதிவு செய்யப்பட்டன.

இன்று இந்தியாவில் மேலும் சுமார் 94,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29.2 மில்லியன்.

ஏறத்தாழ 359,000 பேர் மாண்டனர்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்