இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 5.82 மில்லியனை எட்டியது
இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 5.82 மில்லியனை எட்டியது
இந்தியாவில், கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 5.82 மில்லியனை எட்டியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 86,000க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
அதே காலக்கட்டத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் மாண்டதாகவும் இந்தியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அங்கு மாண்டோரின் மொத்த எண்ணிக்கை சுமார் 92,300. நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் மாண்டோருக்கும் இடையிலான விகிதம் 1.6 விழுக்காடாக உள்ளது.
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து, ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கொண்டுள்ளது இந்தியா.
அமெரிக்காவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 7 மில்லியனைத் தாண்டியது.