இந்தியா: நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8 மில்லியனைத் தாண்டியது
இந்தியா: நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8 மில்லியனைத் தாண்டியது
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8 மில்லியனைத் தாண்டியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி அங்கு, கிருமித்தொற்றால் மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 120,000-க்கும் அதிகம்.
இருப்பினும் கிருமித்தொற்றால் மாண்டுபோவாரின் விகிதம், 1.5 விழுக்காடு என்னும் குறைவான அளவிலேயே உள்ளதாக, இந்தியச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
கடந்த ஆறு நாட்களாக அங்கு கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 700,000-க்கும் குறைவாய் உள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.