இந்தியாவின் கேரள மாநிலத்தில் ,வெடிமருந்து திணித்து வைக்கப்பட்ட பழத்தைத் தின்றதால் கர்ப்பிணி யானை மாண்டதன் தொடர்பில் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், வில்சன் என்ற 40 வயது விவசாயி.
சந்தேக நபர்கள் மேலும் இருவர் இன்னும் பிடிபடவில்லை என்று NDTV செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
யானை கொல்லப்பட்டதற்கு நியாயம் கோரி, பல்வேறு குழுக்கள் பிரசாரம் செய்து வருகின்றன. நீதி கோரும் இணையப் பக்க மனுவில் மில்லியன் கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
Change.org இணையப்பக்கத்தில் மட்டும் 5,500-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
"மக்களின் அக்கறை வீண்போகாது. நீதி நிலை நாட்டப்படும்" என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமது Twitter பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.