இந்தியா அனைத்துலக விமானச் சேவைகளுக்கான தடையை அடுத்த மாதம் 15ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது
இந்தியா அனைத்துலக விமானச் சேவைகளுக்கான தற்காலிகத் தடையை அடுத்த மாதம் 15ஆம் தேதிவரை நீட்டித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா அனைத்துலக விமானச் சேவைகளுக்கான தற்காலிகத் தடையை அடுத்த மாதம் 15ஆம் தேதிவரை நீட்டித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பயணிகளுக்கான விமானச் சேவைகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டாலும் குறிப்பிட்ட சில சேவைகளும் சரக்கு விமானச் சேவைகளும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் மாதத்தில் இந்தியா அதன் முடக்கநிலையை அறிவித்தபோது விமானச் சேவைகள் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டன. கடந்த மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.
கிருமிப்பரவல் நிலவரம் முன்னுரைக்கப்பட்டதுபோல் தொடர்ந்தால் அடுத்த மாதம் பயணத்தை மீண்டும் தொடங்க முடிவுகள் எடுக்கப்படலாம் என்றார் இந்திய சிவில் ஆகாயப் போக்குவரத்து அமைச்சர்.