இந்தியா : வெள்ளத்தில் மாண்டவர்கள் எண்ணிக்கை 200-ஆக உயர்வு
இந்தியாவில் மழை வெள்ளத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மழை வெள்ளத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவின் மேற்கு, தெற்குக் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது.
அதன் காரணமாகச் சுமார் 1.2 மில்லியன் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
தென் மாநிலமான கேரளாவில் 88 பேர் மாண்டனர்.
கர்நாடகா மாநிலத்தில் 48 பேர் வெள்ளத்தால் மாண்டனர்; 16 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.