இந்தியா: குஜராத் மாநிலத்தில் கடுமையான மழையால் வெள்ளம்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்கள் ஜாம்நகர் வட்டாரத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல கயிறுகளுடன், கிடைத்த பொருள்களைக் கொண்டு தற்காலிகப் பாலங்களும் அமைக்கப்பட்டன.
ஒரு மீட்புக் குழு 30க்கும் அதிகமானோரைக் காப்பாற்றியது. அவர்களில் 11 பெண்களும் 7 பிள்ளைகளும் அடங்குவர்.
ஹெலிகாப்டர் மூலமாகவும் சிலர் மீட்கப்பட்டனர்.
ராஜ்கோட் பகுதியில் வெள்ளம் மார்பளவு தேங்கி நிற்கிறது.
24 மணி நேரத்தில் 33 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.