Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை - கோபத்தில் மக்கள்

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தியா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை - கோபத்தில் மக்கள்

படம்: AFP

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொலை தொடர்பாக 4 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காவல்துறை நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் மற்ற நகர்களுக்கும் பரவி வருகிறது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் ஒரு விலங்கு நல மருத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள்  அந்தப் பெண்ணைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் கூறப்பட்டது.

2012ஆம் ஆண்டு புதுடில்லியில் நடந்த இதுபோன்ற ஒரு பாலியல் பலாத்கார சம்பவம், இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்