நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய 13 ஊழியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மேகலாயா (Meghalaya) மாநிலத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 13 ஊழியர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மேகலாயா (Meghalaya) மாநிலத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 13 ஊழியர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த நிலக்கரிச் சுரங்கம் மிகவும் பழைமையானது என்றும், அது மிகவும் ஆபத்தானது என்றும் கூறப்படுகிறது.
சுமார் 2 நாட்களாக அதில் சிக்கிக்கொண்டுள்ள ஊழியர்கள் பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லை என்று அந்த மாநில முதல் அமைச்சர் கொன்ரெட் சங்மா (Conrad Sangma) கூறினார்.
அவர்களை உயிருடன் மீட்க வேண்டிக்கொள்வதாகவும் அவர் Reuters செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.