பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியாவுக்குச் சொந்தமானது : இந்தியா
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியாவுக்குச் சொந்தமானது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியாவுக்குச் சொந்தமானது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
அதையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்த திரு. ஜெய்சங்கர், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் ஒரு பகுதி, ஒரு நாள் புது டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று எதிர்ப்பார்ப்பதாகச் சொன்னார்.
திரு. ஜெய்சங்கரின் கருத்து பொறுப்பற்றது என்றும் சர்ச்சையைத் தூண்டுவதாக உள்ளது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மகமூத் குரேஷி சாடினார்.