இந்தியப் பிரதமர் மோடியை எதிர்த்துக் கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்ட கட்டடத்திற்குள் செல்லமுயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்ட கட்டடத்திற்குள் செல்லமுயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இந்தியாவில் தற்போது சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.
வாரயிறுதியில் கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அந்நகரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கங்களும், கருப்பு கொடிகளையும் காட்டி போராட்த்தை வழிநடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.