Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹைதராபாத் மருத்துவர் கொலைச் சம்பவம் : சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் விலங்கு நல மருத்துவரைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
ஹைதராபாத் மருத்துவர் கொலைச் சம்பவம் : சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை

(படம்: AFP/Sajjad Hussain)

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் விலங்கு நல மருத்துவரைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விசாரணை தொடர்பாக, மருத்துவர் கொலையுண்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சந்தேக நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது சந்தேக நபர்கள் காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

காவல் அதிகாரிகளிடமிருந்து அவர்கள் துப்பாக்கியைத் திருட முயன்றதால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

தாக்குதலின்போது காவல்துறை அதிகாரிகள் இருவர் காயமுற்றனர்.
கடந்த வாரம் ஹைதராபாத் நகரில் இளம் பெண்ணின் கருகிய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பெண்ணைக் கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பாலியல் பலாத்காரச் சம்பவத்தின் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்