இந்தியாவில் சிறுமியரைப் பாலியல் வன்முறை செய்வோருக்கு இனி மரண தண்டனை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 12 வயதுக்குட்பட்ட சிறுமியரிடம் பாலியல் வன்முறை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 12 வயதுக்குட்பட்ட சிறுமியரைப் பாலியல் வன்முறை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
பாலியல் வன்செயல்களைக் கண்டித்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், அரசாங்க நடவடிக்கைகளுக்கு வித்திட்டது.
2016ஆம் ஆண்டில், சுமார் 40ஆயிரம் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து புகாரளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோரில் 40 விழுக்காட்டினர் சிறுமியர்.
ஆக அண்மைச் சம்பவத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்முறைக்குப் பிறகு மாண்டார்.