இந்தியா: கிருமித்தொற்று தொடர்பில் விளக்கம் அளிக்கும்படி 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியா: கிருமித்தொற்று தொடர்பில் விளக்கம் அளிக்கும்படி 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவின் 4 மாநிலங்களில் கிருமித்தொற்று பரவும் விதம், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கமளிக்கும்படி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி, குஜராத், மகாராஷ்டிரா, அஸாம் ஆகியவை அவை.
மாநில அரசாங்கங்கள் விளக்கமான அறிக்கையைச் சமர்ப்பிக்க இரண்டு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் கிருமிப்பரவல் நெருக்கடி மோசமடையலாம் என்று கருதப்படுவதால் உச்ச நீதிமன்றம் அந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
இந்தியாவில் நேற்றுப் புதிதாக 44,000-க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
அவர்களையும் சேர்த்து அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 9.1 மில்லியனுக்கும் அதிகம்.