இந்தியாவில் புதிதாக சுமார் 315,000 பேருக்குக் கிருமித்தொற்று - உலக அளவில் ஆக அதிகமான தினசரி எண்ணிக்கை
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 315,000 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 315,000 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுவே, உலக அளவில் ஒரே நாளில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஆக அதிகமான எண்ணிக்கை.
இதற்கு முன்னதாக, ஜனவரியில் அமெரிக்காவில் 297,000க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர்.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.93 மில்லியனாக உயர்ந்துள்ளது.
சுமார் 184,600 பேர் மாண்டனர்.
- Agencies/zl