நேப்பாள மலையுச்சியில் இரு இந்தியர்கள் மாண்டனர்
உலகத்தின் ஆக உயரமான மலையுச்சிகளில் ஒன்றான கஞ்சென்ஜுங்காவை எட்டும் முயற்சியில் இரு இந்தியர்கள் மாண்டனர்.
(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)
உலகத்தின் ஆக உயரமான மலையுச்சிகளில் ஒன்றான கஞ்சென்ஜுங்காவை எட்டும் முயற்சியில் இரு இந்தியர்கள் மாண்டனர்.
நேப்பாளத்திலிருக்கும் அந்த மலையுச்சியின் சுமார் 8,000 மீட்டர் உயரத்தில் அவர்கள் இறந்தனர்.
48 வயது பிப்லாப் பைத்யா உச்சியிலிருந்து கீழே இறங்கும் வழியில் அதிக உயரத்தில் இருக்கும்போது ஏற்படும் உடல்நலப் பிரச்சினையால் மாண்டார்.
46 வயது குந்தல் கன்ரார் உச்சியை நோக்கிச் செல்லும் வழியில் மாண்டார்.
இருவரும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள்.
உலகின் ஆக உயரமான மலையுச்சிகளில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது கஞ்சென்சஜுங்கா.