பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் பாதிக்கும் மேற்பட்டோரை நாட்டை விட்டு வெளியேற்றும் இந்தியா
பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் பாதிக்கும் மேற்பட்டோரை நாட்டை விட்டு வெளியேற்றும் இந்தியா
இந்தியத் தலைநகர் புது டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேற்றவிருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அவர்கள் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.
இஸ்லாமாபாத்தில் (Islamabad) உள்ள தனது தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கவுள்ளதாகவும் இந்தியா சொன்னது.
வேவு பார்க்கும் நடவடிக்கைளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், பாகிஸ்தானிய அரசதந்திரிகள் இருவரை மே 31-ஆம் தேதி, இந்தியா நாட்டை விட்டு வெளியேற்றியது.
ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று இஸ்லாமாபாத் கூறியது.