இந்தியா: பாலியல் பலாத்காரத்துக்கும் பின்னர் தீவைப்புக்கும் ஆளான பெண் - மருத்துவமனையில் மரணம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கும் பின்னர் நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் தீவைப்புக்கும் ஆளான 23 வயதுப் பெண் மருத்துவமனையில் காலமானார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கும் பின்னர் நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் தீவைப்புக்கும் ஆளான 23 வயதுப் பெண் மருத்துவமனையில் காலமானார்.
நேற்று முன்தினம் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக அந்தப் பெண் சாட்சியமளிக்கச் சென்று கொண்டிருந்தபோது தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.
பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தான் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இவ்வாண்டு மார்ச் மாதம் அந்தப் பெண் புகார் கொடுத்திருந்தார்.
தீவைப்புச் சம்பவத்தின் தொடர்பாக, பாலியல் பலாத்காரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நபர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.