Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா:திருமணத்தில் வெடிப்பு-பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது

திருமணத்தில் எரிவாயுக் கலன் வெடித்ததில் மாண்டோர் எண்ணிக்கை 18க்கு உயர்ந்துள்ளது. சனிக்கிழமை நடந்த அந்தச் சம்பவத்தில், முதலில் ஒன்பது பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
இந்தியா:திருமணத்தில் வெடிப்பு-பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது

படம்: AFP

ராஜஸ்தான்: திருமணத்தில் எரிவாயுக் கலன் வெடித்ததில் மாண்டோர் எண்ணிக்கை 18க்கு உயர்ந்துள்ளது. சனிக்கிழமை நடந்த அந்தச் சம்பவத்தில், முதலில் ஒன்பது பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று கட்டட இடிபாடுகளில் இருந்து மேலும் ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மாண்டோர் எண்ணிக்கை கூடியது.

படம்: AFP 

ராஜஸ்தானிலுள்ள ஹோட்டலில் திருமணச் சடங்கு நடந்துகொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது.

வெடிப்பைத் தொடர்ந்து அந்த இடம் தரைமட்டானது. தீயும் மூண்டது.

சமையல் வல்லுநர், ஒரு எரிவாயுக் கலனில் இருந்து மற்றொரு சமையல் எரிவாயுக் கலனுக்கு எரிவாயுவை மாற்றி நிரப்பும்போது வெடிப்பு நேர்ந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உள்ளூர் ஊடகமான NDTV-யிடம் தெரிவித்தனர்.  


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்