COVID-19: இந்தோனேசியாவில் மோசமடையும் பாதிப்பு; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
இந்தோனேசியா, COVID-19 கிருமிப் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, COVID-19 கிருமிப் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்காசியாவில் அங்கு தான் ஆக அதிகமாக மாண்டோர் எண்ணிக்கை 1,500ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 24,000-ஐக் கடந்து விட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் சுமார் 700 பேரிடம் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கிழக்கு ஜாவாவில் மட்டும் புதிதாக சுமார் 170 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜக்கர்த்தாவை அடுத்து ஆகப் பெரிய நகரான சுரபயாவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.