இந்தோனேசியா: ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையே மூண்ட சண்டையால் பேருந்து விபத்து - 12 பேர் மரணம்
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பேருந்து ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் சாலை விபத்து நேர்ந்தது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பேருந்து ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் சாலை விபத்து நேர்ந்தது.
விபத்தில் 12 பேர் மாண்டதாகவும், சுமார் 43 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
பேருந்து ஓட்டுநருக்கும் பயணிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறி, பயணி பேருந்தை இயக்க முனைந்தார்.
அப்போது பேருந்து சறுக்கிச் சென்று இரண்டு கார்கள் மீது மோதியது.
அதில் ஒரு லாரியும் பாதிக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் பயணிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் பேருந்து ஓட்டுநர் பற்றித் தகவல் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
விபத்து பின்னிரவு 1 மணிக்கு நேர்ந்ததாகவும், பேருந்து ஜக்கர்த்தாவில் இருந்து சிரேபோனுக்குச் (Cirebon) சென்று கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.