இந்தோனேசியா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியது
இந்தோனேசியா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியது
இந்தோனேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியுள்ளது.
தென்கிழக்காசியாவில் ஆகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அது.
இந்தோனேசியாவில் நேற்று புதிதாக நாலாயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
மேலும் 100 பேர் மாண்டனர்.
அவர்களையும் சேர்த்து, மாண்டோர் எண்ணிக்கை 13,600-ஐத் தாண்டியது.
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல்...
பாதுகாப்பு இடைவெளிகளைப் பின்பற்றாமல் இருத்தல்... இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தோனேசியாவில் கிருமித்தொற்று வேகமாய்ப் பரவுவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் 34 மாநிலங்களிலும் கிருமி பரவியுள்ளது.