இந்தோனேசிய அதிபர் தேர்தல் முடிவுகள் - வழக்கு தொடருமா?
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோ தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் பதிவுசெய்த வழக்கைத் தொடர்வதுகுறித்து அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் இன்று முடிவு செய்யும்.
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோ தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் பதிவுசெய்த வழக்கைத் தொடர்வதுகுறித்து அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் இன்று முடிவு செய்யும்.
தேர்தலில் அதிபர் ஜோக்கோ விடோடோ வெற்றிபெற்றார்.
ஆனால் அதில் மோசடி இடம்பெற்றதாகக்கூறித் திரு. பிரபோவோ தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கிறார். காவல்துறை, உளவுத்துறை உட்பட அரசாங்க அமைப்புகளும் ஜோக்கோ விடோடோவிற்கு ஆதரவாய்ச் செயல்பட்டதாகத் திரு. பிரபோவோ தரப்பினர் நம்புகின்றனர்.