Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசிய நிலச்சரிவு: 14 பேர் காயம்

இந்தோனேசியாவின் ஜாவாவில் நெல் வயலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் காயமடைந்தனர் என்றும் 11 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவின் ஜாவாவில் நெல் வயலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் காயமடைந்தனர் என்றும் 11 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் அவர்கள் புதையுண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வயல்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கியதாக இந்தோனேசியாவின் பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்தது.

மலைப் பிரதேசமான அங்கு கடந்த சில நாட்களாகப் பெய்த கனத்த மழையைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மேலும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அந்த வட்டாரத்திற்குள் மக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்