Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசிய எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீ - 10 பேர் மரணம்

இந்தோனேசியாவின் அச்சே (Acheh) மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில், குறைந்தது 10 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீ - 10 பேர் மரணம்

(படம்: AFP / ILYAS ISMAIL)

இந்தோனேசியாவின் அச்சே (Acheh) மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில், குறைந்தது 10 பேர் மாண்டனர்.

மேலும் பலர் காயமடைந்தனர். அந்த எண்ணெய்க் கிணறு அனுமதியின்றிச் செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இரவுப் பொழுதில் மூண்ட அந்தத் தீச் சம்பவத்தில், குறைந்தது மூன்று வீடுகள் பற்றி எரிந்தன.

காலை வரை கட்டுக்கடங்காமல், அந்தத் தீ எரிந்துகொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அப்பகுதியில் நடைபெற்ற குழாய்ப் பற்றவைப்புப் பணி காரணமாகத் தீ மூண்டிருக்கலாம் என்று பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்