இந்தோனேசியத் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது
இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)
இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.
இந்தோனேசிய நேரப்படி இன்று காலை 7 மணிக்குக் கிழக்கு மாநிலமான பாப்புவாவில் (Papua) வாக்களிப்பு தொடங்கியது.
உலகின் 3ஆவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் முதன்முறையாக, பொதுத் தேர்தலும், அதிபர் தேர்தலும் ஒரே நேரத்தில் இடம்பெறுகின்றன.
190 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.