இந்தோனேசியத் தேர்தல்: ஆர்ப்பாட்டம் குறித்து எச்சரிக்கை
இந்தோனேசிய அதிகாரிகள், பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றின் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு எதிராக எச்சரித்துள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இந்தோனேசிய அதிகாரிகள், பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றின் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு எதிராக எச்சரித்துள்ளனர்.
முன்னோடி வாக்கு எண்ணிக்கையில் அதிபர் ஜோக்கோ விடோடோ முன்னணியில் இருப்பதாக ஜக்கர்த்தா போஸ்ட் நாளேடு தெரிவித்தது.
ஆனால் அதிகாரபூர்வமற்ற அந்த முடிவுகளை மற்றொரு வேட்பாளரான முன்னைய ராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோ நிராகரித்துள்ளார்.
அமைதியாக நடைபெற்ற தேர்தலைச் சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் கடுமையாகக் கருதப்படும் என்று இந்தோனேசியாவின் தேசியக் காவல்துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைதுசெய்யப்படலாம் என்றார் அவர்.