இந்தோனேசிய அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வேட்பாளர் பிரபோவோ வழக்குப் பதிவு
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோ தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோ தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
தேர்தலில் அதிபர் ஜோக்கோ விடோடோ வெற்றிபெற்றார்.
ஆனால் அதில் மோசடி இடம்பெற்றதாகக் கூறி, திரு. பிரபோவோ தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கிறார்.
அவரின் தரப்பு வழக்குரைஞர் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
அடுத்த மாதம் 14ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டும்.
தீர்ப்பு ஜூன் 28ஆம் தேதி வெளியிடப்படும்.