Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முதியவரைக் கடித்துக் கொன்ற முதலை

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 66 வயது முதியவர் ஒருவரை முதலை கடித்துக் கொன்றுவிட்டது. வெகுநேரமாகியும் வீடு திரும்பாத முதியவரைத் தேட ஆரம்பித்த அவரின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
முதியவரைக் கடித்துக் கொன்ற முதலை

படம்: AFP/GATHA GINTING

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 66 வயது முதியவர் ஒருவரை முதலை கடித்துக் கொன்றுவிட்டது. வெகுநேரமாகியும் வீடு திரும்பாத முதியவரைத் தேட ஆரம்பித்த அவரின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர்.

அவர் இறுதியாகச் சென்ற ஆற்றோரமாகத் தேட ஆரம்பித்தபோது, பெரிய முதலை ஒன்றை அங்கு கண்டனர். முதலையின் அருகே முதியவரின் உடைமைகள் காணப்பட்டதும், நடக்கக்கூடாது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஊர் மக்களுக்கு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, ஆற்றில் மிதந்த முதியவரின் சடலம் அவர்கள் கண்ணில் பட்டது. அந்த முதலை முதியவரின் உடலின் கீழ்ப்பகுதியையும் இரு கைகளையும் கடித்துத் தின்றுவிட்டது.

இம்மாதிரியான நிகழ்வுகள் இந்தோனேசியாவில் புதிதல்ல.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்