புகைமூட்டத்தால் ஈப்போவில் விமானச் சேவைகள் தாமதம் - பயணிகள் தவிப்பு
புகைமூட்டத்தால் ஈப்போவில் விமானச் சேவைகள் பாதிப்படைந்தன.
புகைமூட்டத்தால் ஈப்போவில் விமானச் சேவைகள் பாதிப்படைந்தன.
அதனால் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக் கொண்டனர்.
சிங்கப்பூர், ஜொகூர் பாரு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமடைந்தன.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 549 பயணிகள் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தில் தங்கியிருக்க நேரிட்டது.
ஈப்போவிற்கு வரவேண்டிய சில விமானங்கள் சிலாங்கூருக்கும் கோலாலம்பூருக்கும் திருப்பிவிடப்பட்டன.
புகைமூட்டத்தால் மலேசியாவின் சில இடங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.